Monday, December 6, 2010

உங்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையவேண்டுமா?


மனித வாழ்வில் எவ்வளவு நாள் சந்தோஷமாக போகின்றது ?
எவ்வளவு நாள் மன வருத்ததுடன் உள்ளோம்
என பார்த்தால் பல நாட்கள் கஷ்டமாகவும்;
சில நாட்கள் மட்டும் சந்தோஷமாக போகின்றது.
அப்போது ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக செல்ல
என்ன வழி என தேடிய போது அருணகிரி நாதர் இயற்றிய


" நாள்என் செய்யும் வினைதான் என்செயும்
எனை நாடி வந்த கோள் என்செயும் கொடுங்கூற்று என்செயும்,
குமரேசர் இருதாளும் சிலம்பும்
சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும்
கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே."

என்கிற இப்பாடல் முருகப்பெருமான், முருகன்,சுப்பிரமணியர்,மயில் வாகனன், ஆறுமுகத்தோன் ,வள்ளிமணாளன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்
இறைவன் முருகருக்காக அருணகிரி நாதர் இயற்றிய இப் பதிகத்தை நாள் உடற்சுத்தம் செய்து ஒரு நினைப்போடு முருகப்பொருமானை நினைத்து
இப்பாடலை பாட , ( நம்பிக்கையடன் படிக்க )
உங்களின் இன்றைய நாள் நல்ல நாளாகவும் மகிழ்ச்கியாகவும்
துன்பம் இல்லாமலும் செல்வது கண்கூடு .இப்பாடலை பாராயணம் செய்த உங்களுக்கு
எல்லாம் வல்ல திருமுருகப்பெருமான் அருள் கிடைக்க வேண்டுகிறேன்.
உங்கள் அனுபவங்களை எனக்கு எழுதுங்கள், நன்றி.

No comments:

பயணக்கட்டுரை :மலை மாதேஸ்வர மலை

நானும் எனது நன்பன் சீனிவாசனும் எனத...